மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வாகனங்களால் வனவிலங்குகள் விபத்தில் உயிரிழப்பதை தவிர்க்க 5 இடங்களில் வனத்துறையினர் வேகத்தடை அமைப்பு.



கோவை: மேட்டுப்பாளையம் - உதகை வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தினை கடந்து இரண்டு வனச்சாலைகளின் வழியே பயணித்து தான் நீலகிரி மாவட்டம் செல்லமுடியும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் சாலை ஆகிய இரண்டு வன சாலைகள் உள்ள நிலையில் இந்த சாலைகளில் அடிக்கடி வன உயிரினங்களான காட்டுயானை, மான், சிறுத்தை, காட்டு எருமை, குரங்கு உள்ளிட்ட பல வன சாலைகளை கடந்து வனப்பகுதிக்கு செல்ல முடியும்.

அப்படி சாலையை கடக்கும் போது வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகளவில் நடக்கிறது.



குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்கவும், மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 5 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் ஓடந்துரை பகுதியில் இருந்து தூரிப்பாலம் வரை சுமார் 5 இடங்களில் வேகத்தடைகளை அமைந்துள்ள வனத்துறையினர் மேற்கொண்டு வனச்சாலையில் அதிவேகமாக வந்து வன உயிரினங்களின் மீது விபத்தை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...