அன்னூர் அருகே குப்பத்தொட்டியில் பச்சிளம் குழந்தை மீட்பு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.



கோவை: அன்னூர் அருகே சாணம்பாளையம் பகுதியில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை சாலையோர குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம்பாளையம், கட்டபொம்மன் நகரில் இன்று தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் குப்பை தொட்டிக்கு அருகே கட்டைப்பை ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

சந்தேகமடைந்த பணியாளர்கள் கட்டைப் பையை திறந்து பார்த்தபோது அதில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றாத நிலையில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அன்னூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் அரசு மகப்பேறு சிகிச்சை மையங்களில், 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பட்டியலை அன்னூர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் முறை தவறி பிறந்ததால் குழந்தை சாலையில் வீசப்பட்டதா?, பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையோரம் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...