பழனிக்கு பாதயாத்திரை - கோவையில் இருந்து துவங்கினார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்!

கோவையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையாக இன்று புறப்பட்டார். பாத யாத்திரையை மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார்.



கோவை: பழனி முருகன் கோயில் பாதயாத்திரையை கோவை ஈச்சனாரி கோயிலில் இருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்.



கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பாதயாத்திரையை துவங்கினார்.

இதில் அவரது பெற்றோர்கள் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.



மேலும் இந்நிகழ்வில் கோவை, திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டும் வெற்றிவேல் வீரவேல் முழக்கமிட்டும் வழி அனுப்பினர்.



இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாதயாத்திரை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இதில் வானதி சீனிவாசனுக்கு வேல் வழங்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...