கோவை காரமடையில் கஞ்சா கடத்தல் - பெண் உட்பட மூன்று பேர் கைது

காரமடை அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது.


கோவை: காரமடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் காரமடை நகராட்சி அலுவலகம் முன்புள்ள பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நடமாடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், அவர்கள் சேலம் வரடேரிகாடு பகுதியை சேர்ந்த சாந்தி(35), ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கோஷடி மரிநியா(28), சதீஸ்காகாரா என்பதும், மூவரும் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக காரமடை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...