கோவை காரமடையில் கஞ்சா கடத்தல் - பெண் உட்பட மூன்று பேர் கைது

காரமடை அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது.


கோவை: காரமடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் காரமடை நகராட்சி அலுவலகம் முன்புள்ள பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நடமாடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், அவர்கள் சேலம் வரடேரிகாடு பகுதியை சேர்ந்த சாந்தி(35), ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கோஷடி மரிநியா(28), சதீஸ்காகாரா என்பதும், மூவரும் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக காரமடை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...