வால்பாறை அருகே அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி.


கோவை: கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் வனப்பகுதியில் திடீர் தீ விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.



ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினருக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வனப்பகுதியில் தீ பிடித்தால் எவ்வாறு தீயைக் கண்டறிவது, அதை எவ்வாறு அணைப்பது என்று தீயணைப்புத் துறையினர் மூலம் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனப்பகுதியில் திடீர் தீ போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம், ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குநர் தலைமையில் வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் வனப்பகுதியில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.



மேலும் வனப்பகுதியில் உயிருக்குப் போராடும் வண்ணம் மனிதர்கள் இருந்தால் அவர்களை முதல் உதவி அளிப்பது, எவ்வாறு காப்பாற்றுவது என்றும் வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் ஆனந்தி விளக்கப் பயிற்சி அளித்தார்.



இதில் 100-க்கும் மேற்பட்ட வனசரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...