வால்பாறை அருகே அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி.


கோவை: கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் வனப்பகுதியில் திடீர் தீ விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.



ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினருக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வனப்பகுதியில் தீ பிடித்தால் எவ்வாறு தீயைக் கண்டறிவது, அதை எவ்வாறு அணைப்பது என்று தீயணைப்புத் துறையினர் மூலம் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனப்பகுதியில் திடீர் தீ போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம், ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குநர் தலைமையில் வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் வனப்பகுதியில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.



மேலும் வனப்பகுதியில் உயிருக்குப் போராடும் வண்ணம் மனிதர்கள் இருந்தால் அவர்களை முதல் உதவி அளிப்பது, எவ்வாறு காப்பாற்றுவது என்றும் வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் ஆனந்தி விளக்கப் பயிற்சி அளித்தார்.



இதில் 100-க்கும் மேற்பட்ட வனசரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...