ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு யார் கட்சி என்று தெரியும்..! - ஒபிஎஸ் அணி அமலன் சாம்ராஜ் பதிலடி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யார் கட்சி, குழு என்பது இடைத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் பதிலடி.


சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு யாருக்குக் கட்சி எனத் தெரிந்து விடும் என எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், ஓபிஎஸ் அணியைச் சார்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன் ஓபிஎஸை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் அணி என்பது ஒரு குழு, கட்சி அல்ல என கூறியிருந்ததற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகாக யார் அணி, கட்சி, குழு என்பது தெரிந்துவிடும்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆருக்குத் திண்டுக்கல் தொகுதி மாற்றத்தைக் கொடுத்தது போல், இபிஎஸுக்கும் ஈரோடு கிழக்கு மாற்றத்தைக் கொடுக்கும் என சொல்லி இருப்பது எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. கோடு போட்ட பூனைகள் எல்லாம் புலியாகி விட முடியாது.

விரைவில் தங்கள் தலைவர் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, தகுதி உள்ள வேட்பாளரை அறிவிப்பார், அவர்தான் வெற்றி வேட்பாளராக இருப்பார் என்றார்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...