ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு யார் கட்சி என்று தெரியும்..! - ஒபிஎஸ் அணி அமலன் சாம்ராஜ் பதிலடி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யார் கட்சி, குழு என்பது இடைத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் பதிலடி.


சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு யாருக்குக் கட்சி எனத் தெரிந்து விடும் என எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், ஓபிஎஸ் அணியைச் சார்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன் ஓபிஎஸை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் அணி என்பது ஒரு குழு, கட்சி அல்ல என கூறியிருந்ததற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகாக யார் அணி, கட்சி, குழு என்பது தெரிந்துவிடும்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆருக்குத் திண்டுக்கல் தொகுதி மாற்றத்தைக் கொடுத்தது போல், இபிஎஸுக்கும் ஈரோடு கிழக்கு மாற்றத்தைக் கொடுக்கும் என சொல்லி இருப்பது எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. கோடு போட்ட பூனைகள் எல்லாம் புலியாகி விட முடியாது.

விரைவில் தங்கள் தலைவர் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, தகுதி உள்ள வேட்பாளரை அறிவிப்பார், அவர்தான் வெற்றி வேட்பாளராக இருப்பார் என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...