சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு - கோவை மாநகர போலீசார் பிரச்சாரம்

சைபர் கிரைம் மோசடிகள் குறித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சைபர் கிரைம் மோசடிகள் குறித்து மக்களிடையே கோவை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண்ணை பெற்று பணத்தை திருடுதல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

அதேபோல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நமது சொந்த தகவல்களை திருடி அதன் மூலம் மிரட்டி பணம் பறித்தல், மொபைல் ஆப் மூலம் கடன் தருவதாக கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோட்டீஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இம்மாதிரி இணையதள மோசடி மூலம் பணத்தை பொதுமக்கள் இழந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசை அணுகினால் இழந்த பணத்தை மீட்க முடியும்.

எனவே இணையதளத்தை அதிகளவு பயன்படுத்தும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...