சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு - கோவை மாநகர போலீசார் பிரச்சாரம்

சைபர் கிரைம் மோசடிகள் குறித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சைபர் கிரைம் மோசடிகள் குறித்து மக்களிடையே கோவை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண்ணை பெற்று பணத்தை திருடுதல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

அதேபோல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நமது சொந்த தகவல்களை திருடி அதன் மூலம் மிரட்டி பணம் பறித்தல், மொபைல் ஆப் மூலம் கடன் தருவதாக கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோட்டீஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இம்மாதிரி இணையதள மோசடி மூலம் பணத்தை பொதுமக்கள் இழந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசை அணுகினால் இழந்த பணத்தை மீட்க முடியும்.

எனவே இணையதளத்தை அதிகளவு பயன்படுத்தும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...