மூக்கூடல் கிராமத்தில் ஸ்ரீ உச்சி மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உடுமலை அருகே மூக்கூடல் ஜல்லிபட்டியில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோயில் கோவில் கும்பாபிஷேக விழாவை வள்ளி கும்மியாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


திருப்பூர்: மூக்கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ உச்சி மகாளியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூக்கூடல் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சி மகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று சிவஸ்ரீ அருண்கேசவ் சிவாச்சியர், சிவஸ்ரீ சிவசங்கர் சர்மா தலைமையில் நடைபெற்றது.



புண்ணிய தளங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாகக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்குத் தண்ணீர் ஊற்றப்பட்டது.



பின்னர் கோபுரங்களுக்கு தீபாரதனை காட்டிய பின் பொதுமக்களுக்குப் புனித நீர், பூ விசபட்டது.



கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் மாலை முக்கிய பாரம்பரியமான வள்ளிகும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



500-க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் ஒன்றுகூடி பாரம்பரியமான பாடல்கள், நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வள்ளி கும்மியாட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...