உடுமலை அருகே மூக்கூடல் ஜல்லிபட்டியில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோயில் கோவில் கும்பாபிஷேக விழாவை வள்ளி கும்மியாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருப்பூர்: மூக்கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ உச்சி மகாளியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூக்கூடல் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சி மகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று சிவஸ்ரீ அருண்கேசவ் சிவாச்சியர், சிவஸ்ரீ சிவசங்கர் சர்மா தலைமையில் நடைபெற்றது.

புண்ணிய தளங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாகக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்குத் தண்ணீர் ஊற்றப்பட்டது.

பின்னர் கோபுரங்களுக்கு தீபாரதனை காட்டிய பின் பொதுமக்களுக்குப் புனித நீர், பூ விசபட்டது.

கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலை முக்கிய பாரம்பரியமான வள்ளிகும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

500-க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் ஒன்றுகூடி பாரம்பரியமான பாடல்கள், நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வள்ளி கும்மியாட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூக்கூடல் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சி மகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று சிவஸ்ரீ அருண்கேசவ் சிவாச்சியர், சிவஸ்ரீ சிவசங்கர் சர்மா தலைமையில் நடைபெற்றது.
புண்ணிய தளங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாகக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்குத் தண்ணீர் ஊற்றப்பட்டது.
பின்னர் கோபுரங்களுக்கு தீபாரதனை காட்டிய பின் பொதுமக்களுக்குப் புனித நீர், பூ விசபட்டது.
கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை முக்கிய பாரம்பரியமான வள்ளிகும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் ஒன்றுகூடி பாரம்பரியமான பாடல்கள், நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வள்ளி கும்மியாட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.