வாகனங்களுக்கு மாற்று எரிசக்தி.. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சமாகுமா? - காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் தகவல்!

சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி வாகனம் இயக்கினால், நாட்டிற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாக வாய்ப்பிருப்பதாக அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் தகவல்.


கோவை: கோவை காளப்பட்டியில் தனியார் ஒட்டலில் ,காற்றாலைகள் வளர்ச்சி குறித்து அகில இந்திய விண்ட் மில் ஆசோசியசேன் சார்பில் "மைண்ட் ஆப் விண்டு" என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.



இதில் கலந்துகெண்டு புத்தகத்தை வெளியிட்ட அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், உலகம் உள்ளவரை காற்றும் , சூரியனும் இருக்கும் என்பதால் இதுபோன்ற இயற்கை சக்தியை பயன்படுத்தி இந்தியா மாற்று எரிசக்தி பயன்படுத்தி மின்சார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நாடு முழுவதும் சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை பயன்படுத்தி வாகனம் இயக்கினால், வெளி நாடுகளில் இறக்குமதி செய்யும் பெட்ரோலுக்கு செலவு செய்யப்படும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும். மாசற்ற சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி என்பது உலகிற்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது.

இதன்மூலம் சுற்றுசுழல் பாதிக்காதவாறு நமது மின்பயன்பாடு இருக்கும். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் காற்றாலை மின் உற்பத்திக்கு மானியம் என்பதை விட acceleration depreciation தொகையை 40% இருந்து 80% ஆக உயர்த்த வேண்டும்.

இதன் மூலம் நாட்டில் சூரிய மற்றும் காற்றாலை தொழில்முனைவோர்களின் முதலீடும் அதிகரிக்கும் என்று கஸ்தூரி ரங்கையன் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...