கோவை மருதமலை வனப்பகுதி அருகே உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் காட்டுத்தீப் பரவும் அபாயம்.
கோவை: சோமயம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மருதமலை வனப்பகுதிக்கு அருகே உள்ள சோமயம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவெனப் பரவி குப்பைக் கிடங்கு முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
இதனால் அருகே உள்ள மருதமலை வனப்பகுதியிலும் காட்டு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக யானைகளின் வலசை பாதைகளும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே அங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மருதமலை வனப்பகுதிக்கு அருகே உள்ள சோமயம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவெனப் பரவி குப்பைக் கிடங்கு முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
இதனால் அருகே உள்ள மருதமலை வனப்பகுதியிலும் காட்டு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக யானைகளின் வலசை பாதைகளும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே அங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.