பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு அருகே கராச்சேரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கராச்சேரியில் குடியரசு தின விழாவை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.



பொதுமக்கள் கூறிய கருத்துக்களைக் கிராம சபைக் கூட்டத்தில் உள்ள பதிவேட்டில் பதியும்படி அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் சமீரன் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.



இதில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா உட்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...