பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு அருகே கராச்சேரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கராச்சேரியில் குடியரசு தின விழாவை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.



பொதுமக்கள் கூறிய கருத்துக்களைக் கிராம சபைக் கூட்டத்தில் உள்ள பதிவேட்டில் பதியும்படி அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் சமீரன் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.



இதில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா உட்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...