தாராபுரம் அருகே மண்ணெண்ணெய் விளக்குடன் கிராம மக்கள் முற்றுகை - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

குடியரசு தினத்தை ஒட்டி தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மண்ணெண்ணெய் விளக்குடன் கிராம மக்கள் முற்றுகை. தெரு விளக்கை முறையாகப் பராமரிப்பதில்லை என்று குற்றச்சாட்டு.



திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியில் குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் குடியரசு தினவிழாவையொட்டி கொட்டாபுளிபாளையம் ரோடு, சிந்துநகர், சிறுவர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமை தாங்கினார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்ட13, தீர்மானங்களை முன் வைத்தனர். இந்த தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்கத் தொடங்கினார்.



அப்போது கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கையில் மண்ணெண்ணெய் விளக்கேந்தி கூட்டத்திற்கு வந்து விளக்கைத் தெரு கம்பங்களில் கட்டி விடுங்கள், நாங்கள் இருட்டில் வாழ்ந்து கொள்கிறோம். மண்ணெண்ணெய் விளக்கின் மூலமாக எங்கள் தெரு பகுதியில் வெளிச்சம் கிடைக்கட்டும் எனத் தெரிவித்தனர்.



அதன் பிறகு தெரு விளக்கை முறையாகப் பராமரிப்பதில்லை எனத் தெரிவித்தனர். இதனால் தலைவர் செல்விக்கும், கிராம மக்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு மண்ணெண்ணெய் விளக்கை ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் பொதுமக்கள் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்த தலைவர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது விளக்கு ஏந்தி வந்த கிராம மக்களைப் பார்த்து மண்ணெண்ணெய் விளக்கு வாங்குவது எனது பொறுப்பல்ல, மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்று விளக்கைக் கொடுங்கள் எனக் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.



மேலும் முகமதியா நகர் வினோபா நகர் பாலசுப்பிரமணியம் நகர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர், குப்பை எடுப்பது, உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், ஊராட்சி, நகராட்சி பகுதியுடன் சேர்ந்து இருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் சிரமமாக உள்ளது எனத் தெரிவித்தார். கிராம சபைக் கூட்டம் முடிவு பெறாமலே கிராம மக்கள் கூச்சல் குழப்பங்களோடு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...