தாராபுரம் அருகே மண்ணெண்ணெய் விளக்குடன் கிராம மக்கள் முற்றுகை - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

குடியரசு தினத்தை ஒட்டி தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மண்ணெண்ணெய் விளக்குடன் கிராம மக்கள் முற்றுகை. தெரு விளக்கை முறையாகப் பராமரிப்பதில்லை என்று குற்றச்சாட்டு.



திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியில் குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் குடியரசு தினவிழாவையொட்டி கொட்டாபுளிபாளையம் ரோடு, சிந்துநகர், சிறுவர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமை தாங்கினார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்ட13, தீர்மானங்களை முன் வைத்தனர். இந்த தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்கத் தொடங்கினார்.



அப்போது கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கையில் மண்ணெண்ணெய் விளக்கேந்தி கூட்டத்திற்கு வந்து விளக்கைத் தெரு கம்பங்களில் கட்டி விடுங்கள், நாங்கள் இருட்டில் வாழ்ந்து கொள்கிறோம். மண்ணெண்ணெய் விளக்கின் மூலமாக எங்கள் தெரு பகுதியில் வெளிச்சம் கிடைக்கட்டும் எனத் தெரிவித்தனர்.



அதன் பிறகு தெரு விளக்கை முறையாகப் பராமரிப்பதில்லை எனத் தெரிவித்தனர். இதனால் தலைவர் செல்விக்கும், கிராம மக்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு மண்ணெண்ணெய் விளக்கை ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் பொதுமக்கள் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்த தலைவர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது விளக்கு ஏந்தி வந்த கிராம மக்களைப் பார்த்து மண்ணெண்ணெய் விளக்கு வாங்குவது எனது பொறுப்பல்ல, மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்று விளக்கைக் கொடுங்கள் எனக் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.



மேலும் முகமதியா நகர் வினோபா நகர் பாலசுப்பிரமணியம் நகர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர், குப்பை எடுப்பது, உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், ஊராட்சி, நகராட்சி பகுதியுடன் சேர்ந்து இருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் சிரமமாக உள்ளது எனத் தெரிவித்தார். கிராம சபைக் கூட்டம் முடிவு பெறாமலே கிராம மக்கள் கூச்சல் குழப்பங்களோடு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...