கோவையில் தினமும் 100 கிலோ தங்க நகைகள் வணிகம் நடக்கிறது! - நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தகவல்

'தை' மாதம் பிறந்துள்ளதால் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட பல விஷேங்களுக்காக தங்க நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், தினமும் 100 கிலோ எடையிலான தங்க நகை வணிகம் நடப்பதாகவும் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்கள் 3 ஆயிரம் பேர், உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள் 10 ஆயிரம் பேர், தங்கத்தை வாங்கி நகை செய்து தரும் பட்டறை தொழிலில் 45 ஆயிரம் பேர் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.



தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மார்கழி மாதத்தில் சுபகாரியங்கள் நடக்காத காரணத்தால் கோவையில் தங்க நகை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்பட்டது.



தை மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபகாரியங்கள் நடக்க தொடங்கியுள்ளதாக தங்க நகைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.



கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் தை மாதம் பிறந்துள்ளதால் சுபகாரியங்கள் அதிகம் நடக்க தொடங்கியுள்ளன.

விலை அதிகரித்துள்ள போதும் மக்கள் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக கோவையில் வழக்கமாக கோவையில் தினமும் 200 கிலோ எடையிலான தங்க நகை வணிகம் நடப்பது வழக்கம்.

தற்போது 50 சதவீதம் அதாவது 100 கிலோ எடையிலான தங்க நகைகள் வணிகம் தினமும் நடக்கிறது. மார்ச் 15-ம் தேதி வரை தொடர்ந்து தங்க நகை விற்பனை சிறப்பாக இருக்கும். எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் மிகவும் மந்தமாக இருந்த தொழில் தை மாதத்திலிருந்து மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாய்ப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...