நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்!

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடியில் 500கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து குடிமைப் பொருள் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை.


நீலகிரி: ரேசன் அரிசியை சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்துவதாகப் புகார்கள் குவிந்து வந்த நிலையில் 500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியைச் சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட குடிமைப் பொருள் புலனாய்வு துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றது.

இதனையடுத்து போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் கக்கநல்லா பகுதியில் குடிமைப் பொருள் புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வாகனத்தைச் சோதனை செய்தபோது 500கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.



அதனைப் பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை விசாரித்த போது கோத்தகிரியிலிருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து ரேசன் கடத்தி வந்த கோத்தகிரி சேட் லைனை சார்ந்த ஓட்டுநர் நரேந்திரன்(40) கைது செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...