நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்!

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடியில் 500கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து குடிமைப் பொருள் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை.


நீலகிரி: ரேசன் அரிசியை சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்துவதாகப் புகார்கள் குவிந்து வந்த நிலையில் 500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியைச் சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட குடிமைப் பொருள் புலனாய்வு துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றது.

இதனையடுத்து போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் கக்கநல்லா பகுதியில் குடிமைப் பொருள் புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வாகனத்தைச் சோதனை செய்தபோது 500கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.



அதனைப் பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை விசாரித்த போது கோத்தகிரியிலிருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து ரேசன் கடத்தி வந்த கோத்தகிரி சேட் லைனை சார்ந்த ஓட்டுநர் நரேந்திரன்(40) கைது செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...