நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்!

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடியில் 500கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து குடிமைப் பொருள் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை.


நீலகிரி: ரேசன் அரிசியை சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்துவதாகப் புகார்கள் குவிந்து வந்த நிலையில் 500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியைச் சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட குடிமைப் பொருள் புலனாய்வு துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றது.

இதனையடுத்து போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் கக்கநல்லா பகுதியில் குடிமைப் பொருள் புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வாகனத்தைச் சோதனை செய்தபோது 500கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.



அதனைப் பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை விசாரித்த போது கோத்தகிரியிலிருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து ரேசன் கடத்தி வந்த கோத்தகிரி சேட் லைனை சார்ந்த ஓட்டுநர் நரேந்திரன்(40) கைது செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...