தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி - துணை ஆட்சியர் பங்கேற்பு

தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்த மாவட்ட துணை ஆட்சியர் பல்லவி வர்மா.



திருப்பூர்: தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே துவங்கியது.

தாராபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட உதவி ஆட்சியர் பல்லவி வர்மா பேரணியைக் கொடியைச் சேர்த்துத் துவக்கி வைத்தார்.



தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்து எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, பொள்ளாச்சி சாலை, அமராவதி சிலை வளாகம் வழியாகக் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்து பேரணியை நிறைவு செய்தனர்.



அங்கு வாக்காளர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



இதில் கல்லூரி மாணவிகள் பொதுமக்களைக் கவரும் விதத்தில், உங்கள் ஓட்டு உங்கள் கையில், வாக்களிப்பது அவரவர் கடமை, உள்ளிட்ட வாசகங்கள் முகம் மற்றும் கைகளில் வரைந்து வித்தியாசமான முறையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...