தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்த மாவட்ட துணை ஆட்சியர் பல்லவி வர்மா.
திருப்பூர்: தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே துவங்கியது.
தாராபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட உதவி ஆட்சியர் பல்லவி வர்மா பேரணியைக் கொடியைச் சேர்த்துத் துவக்கி வைத்தார்.
தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்து எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, பொள்ளாச்சி சாலை, அமராவதி சிலை வளாகம் வழியாகக் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்து பேரணியை நிறைவு செய்தனர்.
அங்கு வாக்காளர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் கல்லூரி மாணவிகள் பொதுமக்களைக் கவரும் விதத்தில், உங்கள் ஓட்டு உங்கள் கையில், வாக்களிப்பது அவரவர் கடமை, உள்ளிட்ட வாசகங்கள் முகம் மற்றும் கைகளில் வரைந்து வித்தியாசமான முறையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.