தேசிய நூற்பாலைகள் திறக்க வேண்டும்..! - மத்திய அரசுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், கோவையில் மூடிக்கிடக்கும் தேசிய நூற்பாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தொழில் வர்த்தக சபை வேண்டுகோள்.


கோவை: கோவையில் இந்திய தொழில் வளர்த்தல் சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



அமைப்பின் தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், செயலாளர்கள் கார்த்திகேயன், அண்ணாமலை, துணைத் தலைவர்கள் ராஜேஷ், பி லந்து, துரைராஜ், சுந்தரம், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கோவை தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தர, மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும், எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும், மதுக்கரை பாலக்காடு சாலை மரப்பாலம் பகுதியிலிருந்து விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோத செயல்கள் தடுக்க கோவையில் உள்ள தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை கோவை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டனர்.



இதற்கு பதிலளித்துப் பேசிய எம்.பி. சண்முகசுந்தரம், கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை மத்திய அரசுடன் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...