தேசிய நூற்பாலைகள் திறக்க வேண்டும்..! - மத்திய அரசுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், கோவையில் மூடிக்கிடக்கும் தேசிய நூற்பாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தொழில் வர்த்தக சபை வேண்டுகோள்.


கோவை: கோவையில் இந்திய தொழில் வளர்த்தல் சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



அமைப்பின் தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், செயலாளர்கள் கார்த்திகேயன், அண்ணாமலை, துணைத் தலைவர்கள் ராஜேஷ், பி லந்து, துரைராஜ், சுந்தரம், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கோவை தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தர, மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும், எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும், மதுக்கரை பாலக்காடு சாலை மரப்பாலம் பகுதியிலிருந்து விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோத செயல்கள் தடுக்க கோவையில் உள்ள தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை கோவை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டனர்.



இதற்கு பதிலளித்துப் பேசிய எம்.பி. சண்முகசுந்தரம், கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை மத்திய அரசுடன் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...