கோவை இடையர் வீதியில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இடையர் வீதியில் மாநகாரட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு நடத்தினார். அங்குள்ள தெருக்களில் சிசிடிவிகளைப் பொறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, 81வது வார்டுக்கு உட்பட்ட இடையர் வீதி, உப்பர் வீதி பகுதிகளில் சாலை ஓரத்தில் பயன்பாடற்று கிடந்த தண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.

மேலும், சாலையோரங்களில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய ஆணையர் பிரதாப், குப்பைத் தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க வேண்டும் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் அப்போது அவர் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்ற ஆணையர், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல் ராஜ் சுகாதார ஆய்வாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...