கோவை இடையர் வீதியில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இடையர் வீதியில் மாநகாரட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு நடத்தினார். அங்குள்ள தெருக்களில் சிசிடிவிகளைப் பொறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, 81வது வார்டுக்கு உட்பட்ட இடையர் வீதி, உப்பர் வீதி பகுதிகளில் சாலை ஓரத்தில் பயன்பாடற்று கிடந்த தண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.

மேலும், சாலையோரங்களில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய ஆணையர் பிரதாப், குப்பைத் தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க வேண்டும் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் அப்போது அவர் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்ற ஆணையர், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல் ராஜ் சுகாதார ஆய்வாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...