கோவை இடையர் வீதியில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இடையர் வீதியில் மாநகாரட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு நடத்தினார். அங்குள்ள தெருக்களில் சிசிடிவிகளைப் பொறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, 81வது வார்டுக்கு உட்பட்ட இடையர் வீதி, உப்பர் வீதி பகுதிகளில் சாலை ஓரத்தில் பயன்பாடற்று கிடந்த தண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.

மேலும், சாலையோரங்களில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய ஆணையர் பிரதாப், குப்பைத் தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க வேண்டும் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் அப்போது அவர் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்ற ஆணையர், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல் ராஜ் சுகாதார ஆய்வாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...