'ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்..!' - கோவையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உஷேன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள திப்பு சுல்தான் காலத்தில் உருவாக்கப்பட்ட பழமையான பெள்ளாதி தர்காவில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் அதிமுக வெற்றி பெறவும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விரைவில் அமைய வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உஷேன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த சிறுபான்மை பிரிவினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த சிறப்பு தொழுகையை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மகன் உசேன், நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சிறுபான்மை மக்களின் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெறும். திமுக அளித்த 525 வாக்குறுதி என்ன ஆனது? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆளும் கட்சியின் பொய் வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள், இன்று எப்போது இந்த ஆட்சி வீட்டிற்கு போகும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், என்றார்.

டி.டி.வி தினகரன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழ்மகன் உசேன், அதிமுக கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட டி.டி.விக்கு அதிமுகவை பற்றியும் இரட்டை இலை பற்றியும் பேச எந்தத் தகுதியும் இல்லை எனவும், அதிமுக மீண்டும் புத்துயிர்பெற்று வருவதாகவும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் அதன் முழு பலனும் எதிரொலிக்கும் என்றும் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...