கோவையில் உயர் அழுத்த மின் கம்பி மீது மரம் உரசி விபத்து - மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலி!

கோவை மதுக்கரை பாலத்துறை அருகே உயர் அழுத்த மின் கம்பி மீது மரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அருகே இருந்த மினி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது42). இவர் அப்பகுதியில் மினி ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த ஹரிதாஸ், வீட்டின் வெளியே உயரமாக வளர்ந்து இருந்த முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டியதாக தெரிகிறது. அப்போது, வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகே இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது.



இதில், மரக்கிளை வழியே மின்சாரம் பாய்ந்ததில், ஹரிதாஸ் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக குறுகிய உயரத்திலேயே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால், ஆபத்து அதிகமாக இருப்பதாக கூறிய அப்பகுதி மக்கள், தற்போது மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

எனவே, அப்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை உயரமான கம்பங்கள் மூலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஹரிதாஸ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...