'நல்ல நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி வராததற்கு நான்தான் காரணம்..!' - தலைவர் சரத்குமார் ஓபன் டாக்

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான், கட்சி சரியாக இருக்கும் எனவும், சமக தலைவர் சரத்குமார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.



சென்னை: சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார்,



ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்ல. கட்சியின் எதிர்கால திட்டம் குறித்தும் இன்று நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க உள்ளதாகவும், இன்று மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.

கொங்கு மண்டலத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார். அதுமட்டுமில்லாமல் பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளேன், என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தனித்துத் தேர்தலில் நிற்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு, ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம்.

அதனால், எதிர்வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் மக்கள் நலனை முன் வைத்தே சமகவின் அரசியல் பயணம் இருக்கும்.

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் எனவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...