'நல்ல நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி வராததற்கு நான்தான் காரணம்..!' - தலைவர் சரத்குமார் ஓபன் டாக்

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான், கட்சி சரியாக இருக்கும் எனவும், சமக தலைவர் சரத்குமார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.



சென்னை: சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார்,



ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்ல. கட்சியின் எதிர்கால திட்டம் குறித்தும் இன்று நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க உள்ளதாகவும், இன்று மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.

கொங்கு மண்டலத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார். அதுமட்டுமில்லாமல் பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளேன், என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தனித்துத் தேர்தலில் நிற்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு, ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம்.

அதனால், எதிர்வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் மக்கள் நலனை முன் வைத்தே சமகவின் அரசியல் பயணம் இருக்கும்.

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் எனவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...