திண்டுக்கல்லில் துணிவு படப் பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றவரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.



திண்டுக்கல்: சினிமா படப் பாணியில் பட்டப்பகலில் மர்மநபர் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இன்று காலை மூன்று ஊழியர்கள் பணியிலிருந்துள்ளனர். அப்பொழுது ஆயுதங்களுடன் உள்ளே வந்த மர்மநபர் ஊழியர்கள் மீது ஸ்பிரே அடித்ததோடு, அவர்களைக் கட்டிப்போட்டு, கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களைப் பார்த்து கொள்ளை, கொள்ளை கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரைப் பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் மர்மநபரைக் கைது செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலீல் ரகுமான்(25) என்பதும், வாழ்க்கை வெறுத்து விட்டதால் துணிவு உள்ளிட்ட சினிமா படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...