திண்டுக்கல்லில் துணிவு படப் பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றவரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.



திண்டுக்கல்: சினிமா படப் பாணியில் பட்டப்பகலில் மர்மநபர் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இன்று காலை மூன்று ஊழியர்கள் பணியிலிருந்துள்ளனர். அப்பொழுது ஆயுதங்களுடன் உள்ளே வந்த மர்மநபர் ஊழியர்கள் மீது ஸ்பிரே அடித்ததோடு, அவர்களைக் கட்டிப்போட்டு, கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களைப் பார்த்து கொள்ளை, கொள்ளை கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரைப் பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் மர்மநபரைக் கைது செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலீல் ரகுமான்(25) என்பதும், வாழ்க்கை வெறுத்து விட்டதால் துணிவு உள்ளிட்ட சினிமா படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...