கோவையில் சிறப்பு மருத்துவ முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

கோவை பெரியநநாய்க்கன் பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூர் பகுதியில் ராமகிருஷ்ணா இயக்கத்தின் 125 வது ஆண்டு விழா மற்றும் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பொது மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.



அங்குள்ள கனரா வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமில், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். இந்த முகாமில், வெளி நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.



உள் நோயாளிகளாக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்ததாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...