கோவையில் சிறப்பு மருத்துவ முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

கோவை பெரியநநாய்க்கன் பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூர் பகுதியில் ராமகிருஷ்ணா இயக்கத்தின் 125 வது ஆண்டு விழா மற்றும் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பொது மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.



அங்குள்ள கனரா வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமில், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். இந்த முகாமில், வெளி நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.



உள் நோயாளிகளாக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்ததாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...