கோவையில் சிறப்பு மருத்துவ முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

கோவை பெரியநநாய்க்கன் பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூர் பகுதியில் ராமகிருஷ்ணா இயக்கத்தின் 125 வது ஆண்டு விழா மற்றும் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பொது மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.



அங்குள்ள கனரா வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமில், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். இந்த முகாமில், வெளி நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.



உள் நோயாளிகளாக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்ததாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...