கோவையில் சிறப்பு மருத்துவ முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

கோவை பெரியநநாய்க்கன் பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூர் பகுதியில் ராமகிருஷ்ணா இயக்கத்தின் 125 வது ஆண்டு விழா மற்றும் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பொது மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.



அங்குள்ள கனரா வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமில், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். இந்த முகாமில், வெளி நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.



உள் நோயாளிகளாக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்ததாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...