போலி பாஸ்போர்ட்டில் பயணம் - கோவை ஏர்போர்ட்டில் வங்கதேச இளைஞர் கைது!

போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த வங்கதேச இளைஞர், கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர்-அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை கண்காணிக்கும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரை அதிகாரிகள் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த இளைஞர், தான் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். மேலும், அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டிலும் மேற்கு வங்கம் மாநிலம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் சந்தேகத்தின் பேரில், அவரை தேசிய கீதம் பாடுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது, அந்த இளைஞருக்கு தேசிய கீதம் தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் வங்கதேசம் நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது28) என்பதும், போலி பாஸ்போர்ட் மூலம் கோவைக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பீளமேடு போலீசார் அன்வர் உசேனை கைது செய்து, அவர் மீது 14-c of foreigner act மற்றும் 12(1A)(a) passport act ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...