போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த வங்கதேச இளைஞர், கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர்-அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை கண்காணிக்கும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரை அதிகாரிகள் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த இளைஞர், தான் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். மேலும், அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டிலும் மேற்கு வங்கம் மாநிலம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் சந்தேகத்தின் பேரில், அவரை தேசிய கீதம் பாடுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது, அந்த இளைஞருக்கு தேசிய கீதம் தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் வங்கதேசம் நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது28) என்பதும், போலி பாஸ்போர்ட் மூலம் கோவைக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பீளமேடு போலீசார் அன்வர் உசேனை கைது செய்து, அவர் மீது 14-c of foreigner act மற்றும் 12(1A)(a) passport act ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அதில், அந்த இளைஞர், தான் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். மேலும், அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டிலும் மேற்கு வங்கம் மாநிலம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் சந்தேகத்தின் பேரில், அவரை தேசிய கீதம் பாடுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது, அந்த இளைஞருக்கு தேசிய கீதம் தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் வங்கதேசம் நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது28) என்பதும், போலி பாஸ்போர்ட் மூலம் கோவைக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பீளமேடு போலீசார் அன்வர் உசேனை கைது செய்து, அவர் மீது 14-c of foreigner act மற்றும் 12(1A)(a) passport act ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.