கூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம் - உண்ணாவிரதம் நடத்த பொதுமக்கள் திட்டம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கவுண்டன்கொல்லி பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் நாளை 25-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கவுண்டன் கொல்லி, பாடந்துறை போன்ற பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அது குறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் வழங்கபட்ட போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனையடுத்து, கூடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். மாவட்ட முதன்மை வன அலுவலகத்திற்கு சென்றபோது மாவட்ட வன அலுவலரிடம் மனு வழங்கியபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



காட்டு யானை அட்டகாசம் தொடர்பாக, வனத்துறை உயர் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியிருந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மக்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அந்த பேச்சு வார்த்தையின்போது, விரைவில் ஒற்றை காட்டு யானையை விரைந்து பிடிக்க உத்தரவு வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் வருகின்ற 25ஆம் தேதி இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் திரண்டு தேவர் சோலை பேரூராட்சி முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காட்டு யானையை பிடிப்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...