திருப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவியப் போட்டி - ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியான கேந்திரிய வித்யாலாயாவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மத்திய அரசின்கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி "பரீட்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டுமுதல் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ மாணவியரை சந்தித்து தேர்வு பயத்தை நீக்குவதற்கான 25 மந்திரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.



இதை முன்னிட்டு, இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் தேசிய அளவில் 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் 50,000 மாணவர்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியை இப்போட்டி நடத்தும் மையமாக மத்திய அமைச்சகம் தேர்வு செய்தது.

அதன் அடிப்படையில், உடுமலை கல்வி மாவட்டத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் உபகரணங்களும், அதுமட்டுமின்றி பிரதமர் எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.



மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஐந்து ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...