திருப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவியப் போட்டி - ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியான கேந்திரிய வித்யாலாயாவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மத்திய அரசின்கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி "பரீட்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டுமுதல் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ மாணவியரை சந்தித்து தேர்வு பயத்தை நீக்குவதற்கான 25 மந்திரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.



இதை முன்னிட்டு, இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் தேசிய அளவில் 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் 50,000 மாணவர்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியை இப்போட்டி நடத்தும் மையமாக மத்திய அமைச்சகம் தேர்வு செய்தது.

அதன் அடிப்படையில், உடுமலை கல்வி மாவட்டத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் உபகரணங்களும், அதுமட்டுமின்றி பிரதமர் எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.



மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஐந்து ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...