திருப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவியப் போட்டி - ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியான கேந்திரிய வித்யாலாயாவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மத்திய அரசின்கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி "பரீட்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டுமுதல் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ மாணவியரை சந்தித்து தேர்வு பயத்தை நீக்குவதற்கான 25 மந்திரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.



இதை முன்னிட்டு, இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் தேசிய அளவில் 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் 50,000 மாணவர்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியை இப்போட்டி நடத்தும் மையமாக மத்திய அமைச்சகம் தேர்வு செய்தது.

அதன் அடிப்படையில், உடுமலை கல்வி மாவட்டத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் உபகரணங்களும், அதுமட்டுமின்றி பிரதமர் எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.



மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஐந்து ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...