திருப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவியப் போட்டி - ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியான கேந்திரிய வித்யாலாயாவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மத்திய அரசின்கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி "பரீட்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டுமுதல் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ மாணவியரை சந்தித்து தேர்வு பயத்தை நீக்குவதற்கான 25 மந்திரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.



இதை முன்னிட்டு, இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் தேசிய அளவில் 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் 50,000 மாணவர்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியை இப்போட்டி நடத்தும் மையமாக மத்திய அமைச்சகம் தேர்வு செய்தது.

அதன் அடிப்படையில், உடுமலை கல்வி மாவட்டத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் உபகரணங்களும், அதுமட்டுமின்றி பிரதமர் எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.



மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஐந்து ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...