சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டக் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்.


கோவை: சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், ஜே.கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமம், வலசுப்பளயத்தில் உள்ள செல்வராஜ் நிலத்திற்கு பிஏபி பாசனத் திட்டத்தில் ஆயக்கட்டு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் உள்ள விவசாயி ஷோபனாவின் நிலத்தின் வழியாக அரசு சார்பில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தண்ணீர் வரும் கால்வாயும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயி ஷோபனா, சிறு விவசாயி செல்வராஜுக்கு பி.ஏ.பி தண்ணீரை விடாமல் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாகத் தடுத்துள்ளதாகவும், கால்வாயையும் மண்ணை கொட்டி மூடி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவசாயி செல்வராஜ் கடந்த ஆறு மாதங்களாக சூலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.



ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாயை மீட்டு, தண்ணீர் ஏற்பாடு செய்து தரக் கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.



ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி ஷோபனா மீது வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கோரிக்கை நிறைவேறும் வரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் சூலூர் வட்டாட்சியர் மற்றும் பிஏபி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சேதப்படுத்தப்பட்ட வாய்க்காலை உடனடியாக சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருவதாகவும் உறுதியளித்தனர்.

கோரிக்கைகளை வரும் 26ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மீண்டும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்றுத் தற்காலிகமாக இன்று விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...