சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டக் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்.


கோவை: சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், ஜே.கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமம், வலசுப்பளயத்தில் உள்ள செல்வராஜ் நிலத்திற்கு பிஏபி பாசனத் திட்டத்தில் ஆயக்கட்டு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் உள்ள விவசாயி ஷோபனாவின் நிலத்தின் வழியாக அரசு சார்பில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தண்ணீர் வரும் கால்வாயும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயி ஷோபனா, சிறு விவசாயி செல்வராஜுக்கு பி.ஏ.பி தண்ணீரை விடாமல் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாகத் தடுத்துள்ளதாகவும், கால்வாயையும் மண்ணை கொட்டி மூடி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவசாயி செல்வராஜ் கடந்த ஆறு மாதங்களாக சூலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.



ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாயை மீட்டு, தண்ணீர் ஏற்பாடு செய்து தரக் கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.



ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி ஷோபனா மீது வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கோரிக்கை நிறைவேறும் வரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் சூலூர் வட்டாட்சியர் மற்றும் பிஏபி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சேதப்படுத்தப்பட்ட வாய்க்காலை உடனடியாக சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருவதாகவும் உறுதியளித்தனர்.

கோரிக்கைகளை வரும் 26ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மீண்டும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்றுத் தற்காலிகமாக இன்று விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...