கோவையில் ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை - கண்ணீர்மல்க குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவையில் பெட்ரோல் ஊற்றி ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (50). லோடு ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று காலை நண்பர் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடிரென ரவி மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு தீ வைத்தார். இதில் ரவி படுகாயம் அடைந்தார்.

இதைப்பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ரவியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேருநகரை சோ்ந்த கூலித்தொழிலாளி பூபாலன் (40) என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் பூபாலனை கைது செய்தனர்.



இந்நிலையில் உயிரிழந்த ரவியை கொலை செய்ய தூண்டியவர்களை கண்டுபிடிக்க வேண்டும், இறந்தவருக்கு இரண்டு மகள் உள்ளதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ரவியின் இரண்டு மகள்கள், மனைவி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இதையடுத்து ஆட்சியரை சந்தித்து குடும்பத்தினர் புகார் மனு அளித்து முறையிட்டனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...