உடுமலை பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை திறக்க கோரிக்கை

உடுமலை பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்கள் வசதிக்காகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை அதிகாரிகள் எப்போது திறப்பார்கள் என ஏக்கத்துடன் காத்திருப்பு.


திருப்பூர்: உடுமலையில் பொதுமக்கள் சாலையைச் சிரமமின்றி கடக்கப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை திறக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து நிலையம் உள்ளது. இதனால் சாலையைக் கடக்கப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.



இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் உடுமலை-பொள்ளாச்சி சாலை நடுவே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனாலும் அது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் உள்ளது.



இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே சாலையைக் கடந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு பக்கமும் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நடைமேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...