கோவையில் குடிபோதையில் லாரி கண்ணாடியை உடைத்து ஓட்டுனர் மீது தாக்குதல் - இளைஞர் கைது

கோவை எட்டிமடை அருகே சாலையில் தன்னை முந்திச் சென்ற லாரியின் கண்ணாடியை உடைத்து, லாரி ஓட்டுனரை தாக்கிய குடிபோதை ஆசாமி ராஜாவை பொதுமக்கள் பிடித்து கே.ஜி.சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை அடுத்த கே.ஜி.சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (30). லாரி ஓட்டுனரான இவர், நேற்று மாலை மது அருந்திவிட்டு குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் எட்டிமடையில் இருந்து திருமலையாம்பாளையம் சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் எட்டிமடையை நோக்கி சென்ற போது அவ்வழியாக சோப்பு லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்ற லாரி, ராஜாவின் இருசக்கர வாகனத்தை முந்தி சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா லாரியை பின்னால் துரத்திச் சென்று எட்டிமடை அருகே மடக்கி பிடித்துள்ளார். பின்னர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு, லாரி ஓட்டுநர் பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மதுபோதையில் இருந்த ராஜாவை மடக்கி பிடித்து, லாரி ஓட்டுநரை அவரிடம் இருந்து மீட்டனர். இதனை தொடர்ந்து, கே.ஜி.சாவடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் மதுபோதையில் தாக்குதல் நடத்திய ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், காயமடைந்த லாரி ஓட்டுநர் பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...