திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளன கட்டிட தொழிலாளர் சங்கத்தின் கிளைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆர்.வேலூர் ஊராட்சியில் இந்திய தொழிற்சங்க சம்மேளனம் கட்டிட தொழிலாளர் சங்கம் கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிற்சங்க மாவட்ட செயலாளருமான குணசேகரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

அதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தது 5000 நிர்ணயம் செய்ய கோரிக்கை மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் பேரவைக் கூட்டத்தில், மகளிர் அணி பொறுப்பாளர் வைதேகி, தொழிற்சங்க நகர பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர். மேலும், அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட நலவாரிய அட்டைகள் மற்றும் நடப்பாண்டிற்கான தினசரி நாட்காட்டியும் இந்தப் பேரவைக் கூட்டத்தில் இறுதியில் வழங்கப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிற்சங்க மாவட்ட செயலாளருமான குணசேகரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தது 5000 நிர்ணயம் செய்ய கோரிக்கை மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் பேரவைக் கூட்டத்தில், மகளிர் அணி பொறுப்பாளர் வைதேகி, தொழிற்சங்க நகர பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர். மேலும், அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட நலவாரிய அட்டைகள் மற்றும் நடப்பாண்டிற்கான தினசரி நாட்காட்டியும் இந்தப் பேரவைக் கூட்டத்தில் இறுதியில் வழங்கப்பட்டது.