உடுமலையில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு - சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அணையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, குடிநீரை சுத்திகரித்து உடுமலை நகராட்சி 2வது கூட்டு குடிநீர் திட்டம் மடத்துத்துக்குளம், குடிமங்கலம், உடுமலை ஒன்றிய பகுதிகளுக்கு பூலாங்கிணறு. கணக்கம்பாளையம், மடத்துக்குளம் குடிமங்கலம், புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பூலாங்கிணறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக செல்லும் ராட்சத குடிநீர் குழாய் ஒன்றில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூலாங்கிணறு பகுதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி சாலைகளில் ஓடி வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை போர்க்கால அடிப்படை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...