உடுமலையில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு - சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அணையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, குடிநீரை சுத்திகரித்து உடுமலை நகராட்சி 2வது கூட்டு குடிநீர் திட்டம் மடத்துத்துக்குளம், குடிமங்கலம், உடுமலை ஒன்றிய பகுதிகளுக்கு பூலாங்கிணறு. கணக்கம்பாளையம், மடத்துக்குளம் குடிமங்கலம், புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பூலாங்கிணறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக செல்லும் ராட்சத குடிநீர் குழாய் ஒன்றில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூலாங்கிணறு பகுதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி சாலைகளில் ஓடி வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை போர்க்கால அடிப்படை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...