அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், சொத்துக்களை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவையில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், தங்களது சொத்துக்களை அபகரித்து இருப்பதோடு, குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சவிதா, ராஜமாணிக்கம் தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜமாணிக்கம், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்து இருப்பதாக புகார் தெரிவித்தார்.

மேலும் 20 குண்டர்களை வைத்து தங்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டி வருவதாகவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்து அட்டகாசம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்த போதும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய அவர், அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...