அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், சொத்துக்களை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவையில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், தங்களது சொத்துக்களை அபகரித்து இருப்பதோடு, குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சவிதா, ராஜமாணிக்கம் தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜமாணிக்கம், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்து இருப்பதாக புகார் தெரிவித்தார்.

மேலும் 20 குண்டர்களை வைத்து தங்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டி வருவதாகவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்து அட்டகாசம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்த போதும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய அவர், அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...