அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், சொத்துக்களை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவையில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், தங்களது சொத்துக்களை அபகரித்து இருப்பதோடு, குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சவிதா, ராஜமாணிக்கம் தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜமாணிக்கம், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்து இருப்பதாக புகார் தெரிவித்தார்.

மேலும் 20 குண்டர்களை வைத்து தங்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டி வருவதாகவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்து அட்டகாசம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்த போதும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய அவர், அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...