திருப்பூரில் பிப்.11 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பிப்ரவரி 11ஆம் தேதி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.



திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது.



இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையர் காந்தி குமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டத்திலும் இந்த வேலை வாய்ப்பு முகமானது வரும் பிப்ரவரி 11ஆம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. இதன் மூலம் 10,000 மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்கள் https://tirupurjobfar.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களை அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...