திருப்பூரில் பிப்.11 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பிப்ரவரி 11ஆம் தேதி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.



திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது.



இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையர் காந்தி குமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டத்திலும் இந்த வேலை வாய்ப்பு முகமானது வரும் பிப்ரவரி 11ஆம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. இதன் மூலம் 10,000 மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்கள் https://tirupurjobfar.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களை அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...